சிதறல்கள்

Friday, April 10, 2020

சுற்றமும் சுழலும்



வானம் பார்த்து
பறக்க ஆசைப்பட்டோம் –பறந்தோம் ;
சிந்தனையும் இல்லாமல் ,சிறகுகள் இல்லாமல்
வளிமண்டலத்தின்
ஓசான் படலத்தை கிழித்து` …

நிலம் பார்த்து
நிற்க ஆசைப்பட்டோம் - நின்றோம் ;
நினைவுகள் இல்லாமல் ,நிம்மதியும் இல்லாமல்
விவசாய நிலம் அழித்து
மா-கட்டடம் எழுப்பி…

நீர் பார்த்து
மிதக்க ஆசைப்பட்டோம்-மிதந்தோம்;
நீச்சலும் தெரியாமல், பதட்டமும் அறியாமல்
அணு கழிவுகளை
கொட்டும் கலமாக்கி…

நெருப்பை பார்த்து
புகைக்க ஆசைப்பட்டோம்-புகைத்தோம்;
புதியன எண்ணாமல், பழையன கழிக்காமல்
எண்ணிலடங்கா நாட்களாய்
எரியும் நீரக கரிமமாக்கி ….

காற்றை பார்த்து
உலகம்
விரிவடைய ஆசைப்பட்டோம் -விரிந்தோம்
விந்தைகள் அறியாமல், விஷயம் புரியாமல்
பசுமை வளியை அழித்து
புவியை வெப்பமாக்கி …

Thursday, April 2, 2020

பரிவர்த்தனை



விலாசம் தேடி
வீதியில் அலைந்த
சிவப்பு விளக்கு மங்கை நோக்கி
நோக்கினான் அயல் தேசத்து அயலான்
பரிமாற்றம் நடந்தது
பரிவர்த்தனை முடிந்தது
HIVயும் கொரானாவும்
எது முந்தும் எது முடியும்
ஈஸாவுக்கும் தெரியுமா!!!
இன்ஸாவுக்கும் அறியுமா!!!
முடிவு செயலுக்கு தானே ??/….
மாறா மதம் எதற்கு மனிதம் போற்றும் நல்நடத்தை போதுமே….


தேடலுடன்,

விஜய் ஆனந்த்


Friday, March 27, 2020

உயிர்கொல்லியின் சமத்துவம்...



ஏகாதிபத்தியம் முதல் ஏழையரசு வரை
தொட துணிந்த உயிரி;

மாவட்ட எல்லை,
மாநில எல்லை,
நாடுகளின் எல்லை,
கண்டங்களின் எல்லை கடந்த உயிரி ;

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
நால்வர்ண ஆலாதித்தவரை
ஒதுங்க வைத்த உயிரி ;

கருப்பு வெள்ளை 
என பேதபடுத்தியவரை
பதுங்க வைத்த உயிரி ;

மதம் பேசி 
மானிடரை பிளவு படுத்தியவனை
மயானம் எண்ணி 
அச்சம் கொள்ள வைத்த உயிரி ;

முப்பாலில் ஒன்றான
தன்பால் தான் உயர்ந்தது 
என்று எண்ணியவனை
தனிமை படுத்திய உயிரி;

ஆத்திகவாதி முதல் நாத்திகவாதி வரை
வியாதி நினைத்து 
விலக வைத்த உயிரி;

ஒலிம்பிக்கில் 
உச்சம் தொடுபவனை
தொற்றில் உச்சம் 
தொட வைத்த உயிரி ;

இது நிறைவடைய,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ,
தீதும் நன்றும் பிறர் தர வாரா ,
சுத்தம் அண்டம் காக்கும் ,
என்று எண்ணி

நேனோ உயிரி உலகத்துக்கு
கொடுத்த
அச்சம்  தற்காலிகம் ;
உணர்த்திய
சமத்துவம் நிரந்தரம் ;


விஞ்ஞான உலகில்  
மெய் பொருள் அறிந்து -விலாசம் பெறுவோம் ;
Bio War யை Bio Epic யாக மாற்றுவோம்;
விகாரி நிறைவுற்று சார்வாரியில்
சூழல் காத்து 
கிருமியில்லா உலகம் செய்வோம்
கடவுளை நினைத்து இயற்கையை போற்றி …


உணர்வுடன்,

விஜய் ஆனந்த்


Sunday, June 17, 2018

தகவமைவு


மலரில் உட்கார்ந்த வண்டு கேட்டது
உன்னால் பறக்கமுடியுமா என்று..

அதற்கு மலர் சொன்னது
என்னை வெட்டி விடு செடியிலிருந்து
பறந்து பூமியில் விழுவேன் என்று..

மீண்டும் மலரிடம் வண்டு கேட்டது
தொடர்ச்சியாக பறக்க முடியுமா என்று..

மலர் சொன்னது
நான் நீயாக மாறினால்
தற்காலிமாக பறந்து
விழத்தானே முடியும்..

இயற்கை அன்னை சிரித்தே சொன்னாள்
தேவையில்லா மாற்று வாழ அல்ல வீழ மட்டுமே....

விஜய் ஆனந்த் 
-->

Friday, September 9, 2016

குற்றமே தண்டனை


நதியோரம் நாகரிகம் தோன்றியது -ஆதிகாலம்
நதியால் நாதியற்று நிற்கும் தலைமுறையால் ;
நாகரீகம் பாழ்பட்டு நாளைய தலைமுறையின் 
கோடரி காம்பு ஆனது - கலிகாலம்...




நடந்தாய் வாழி காவிரி -கானல் ஆயிற்று;
தாகம் தீர்த்த தன் பொருநை -மணல் மாஃபியா
கூடாரம்  ஆயிற்று;
பாசனத்தின் மூல நதி -பாலாறு
கழிவு நீர் கிடங்கு  ஆயிற்று;



தேடியவருக்கு திரவியம் தரும் -தென் பெண்ணை 
தேடும் நதி  ஆயிற்று;
மீன் பிடி கூவம் மீளா துயரம்  ஆயிற்று;
காஞ்சிமா நதி காய்ந்து போன sludge drying bed  ஆயிற்று....



கையறு நிலைக்கு கையந்தாமல் வாழ
காலத்தின் தேவை அம்மா இட்லி அல்ல
பாதுகாக்கப்பட்ட நாகரீக தொட்டில் (நதி)...

அடுக்க அடுக்க அடங்கா மனித தவறு
மூச்சை அடக்கும் நாளை !!!

இன்றைய தலைமுறையின் குற்றம்
நாளைய தலைமுறைக்கு தண்டனையா ??


குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை ஏற்பு சரி...
வருங்கால தலைமுறைக்கும் ஆயுள் தண்டனை சரியா???


வினையின் பாவம் விதைத்தவனுக்கு,
விதையே பாவமாய் PT வழி வந்தால்,
நாளை தலைமுறைக்கு மருந்தே உணவாகும்...







நம்மாழ்வார் வாக்கும்
சுவாமி நாதன் போக்கும்-நிலை பெற்றால்
கணினி உலக கண்ணும் ,உழவனின் கண்மாயிம் திறக்கும்
கார்பரெட் அடிமை கயலாய் கருத்துறும்..
மரபணு மாற்றா மரபு உருபெறும் நாளை.....
 





ம்
நீரின்றி அமையா உலகு
நீர் வழிச் சாலை இன்றி அமையா நாளைய தமிழகம்....

 













உணர்வுடன்
  
விஜய் ஆனந்த் .S
-->